நெஞ்சம் மட்டுமல்ல நினைவும் மறப்பதில்லை
நெஞ்சம் மட்டுமல்ல நினைவும் மறப்பதில்லை - உங்களுக்கும்தானே. மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோமே ! நம்மால் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் நிச்சயம் இருக்கும். சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று ஆசை பட்டேன். நீங்களும் உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளலாம். (யாருடைய மனதும் புண்படாமல் என்பது Request) இங்கே என் பள்ளி நாட்களில் நடந்த ஒரு நிகழ்ச்சியை கட்டுரை வடிவில் தந்துள்ளேன். மறக்க முடியுமா TAHSS school ஐ !!! திருவிடைமருதூர் பள்ளியில் சிங்கிநீர் குளம் அருகில் ஒரு மேடு உண்டு அதில் NCC துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும். அதை பார்க்கும் போது எனக்கும் அதில் சேர்ந்து துப்பாக்கியை தூக்கி சுடவேண்டும் என்ற ஆசை மேற்பட்டது அதனை காட்டிலும் NCC பரேடில் பூரி தருவார்கள் என்ற கொசுறு செய்தியை ஜானகிராமன் கூற நாக்கில் நீர் ஊறியது. இதில் சேர என்ன செய்ய வேண்டும் என்று அவனை கேட்க பேபி சாரை பார்க்க சொன்னான். நானும் அவரை பார்க்க ஆசிரியர்கள் இருக்கும் அறைக்கு சென்று கேட்டேன் அதற்கு அவர் உனக்கு " எதற்குடா இந்த விபரீத ஆசை ? " என்றார். ஏன் என்றல் அப்போது நான் பற...
Comments
Post a Comment